Thursday, August 25, 2011

ஏசுநாதர் கூட கிறிஸ்துவர் அல்ல...!

பாவிகளை மன்னிப்பதுதான் பெரிய கருணை அத்தகைய கருணை மனம் எங்களிடம்தான் உள்ளதென பல கிறிஸ்தவ பாதிரிமார்கள் சொல்லுகிறார்கள்

பாவமன்னிப்பு என்பதை இவர்கள் முழுமையான சரணாகதி என்றும் சொல்வதில்லை அதை நம்புகின்றவர்களும் அந்த அர்தத்தில் எடுத்துக் கொள்வதுமில்லை

பகையாளியின் காதை கடித்து விட்டு ஐய்யோ கடவுளே தப்பு செய்து விட்டேன் மன்னித்து விடு என ஜெபம் செய்தால் எல்லாம் சரியாகிவிடும் என நினைக்கிறார்கள்

இதனால்தான் பல தவறுகள் மீண்டும் மீண்டும் நடக்கிறது

 உண்மையில் எந்தத் தவறு செய்தாலும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்றே இந்துமதம் செல்கிறது அதற்கு காரணம் உண்டு

உலகில் உள்ள எல்லா மதமும் பாவ புண்ணியத்தைப் பற்றி விரிவாக பேசுகின்றன.  பாவம் செய்யாதே என்று சொல்லாதவர்கள் யாருமே இல்லை.

 கடவுளை வணங்குபவன் முட்டாள்.  கடவுளை கண்டுபிடித்தவன் காட்டுமிராண்டி என சொல்லும் நாத்திகர்கள் கூட பாவம் செய் என சொல்வது இல்லை.

 ஆக உலகில் உள்ள எல்லோருமே பாவத்தை வெறுக்கிறார்கள்.

  ஆனால் அப்படி வெறுப்பவர்களாலேயே தினசரி புதிய பாவங்கள் உற்பத்தியாகி கொண்டே இருக்கிறது.

  தவறு என்று தெரிந்தும் புதிய புதிய பாவங்கள் செய்யப்படுவது ஏன்?

  மனிதன் ஒவ்வொரு செயலிலும் தனது சந்தோஷம் வளர வேண்டுமென ஆசைப்படுகிறான்.

  தனக்கு இன்பம் தராததை செய்வதற்கு அவன் மனம் ஒப்புவது இல்லை.

 துன்பம் இல்லாத வாழ்க்கையை தேடும் போது அதன் குறுக்கே எது வந்தாலும் சரியா தப்பா என சிந்திக்காமல் எல்லாவற்றையும் மோதி  மிதிக்க ஆரமித்து விடுகிறான்.

  நான் சிறிய வயதில் ஒரு பழமொழியை அடிக்கடி கேட்டுருக்கிறேன்.

 பரிசுத்தமுள்ள பூனை பரலோகத்திற்கு போகும் போது கக்கத்தில் கருவாட்டை இடுக்கி கொண்டு போனதாம் என்பது தான் அந்த பழமொழி.


  கருவாட்டை இடுக்கி கொண்ட பூனை போல தான் மனிதர்கள் இருக்கிறார்கள்

  ஒரு கை அரவணைக்க இன்னொரு கை முதுகில் குத்தும் செயல் போன்றது தான்.  வாய் புண்ணியத்தை பேசுவதும் மனம் பாவத்தை செய்வதும்.

  நான் ஒரு தவறு செய்தால் அதற்கான தண்டனையை கால தாமதம் ஆனாலும் கூட அதை நான் தான் அனுபவிக்க வேண்டும். 

தினசரி நான்கு பாக்கெட் சிகரெட் ஊதி தள்ளிவிட்டு நுரையீரல் புற்று நோய் வந்தவுடன் அய்யோ நான் பாவம் செய்து விட்டேன் என்னை யாராவது மன்னியுங்கள் என கேட்பதும் என்னிடத்தில் வா உன்னை மன்னித்து விடுதலை தருகிறேன் என கூறுவதும் வடிகட்டிய கயமை ஆகும்.

  எந்த ஒரு விளைவுக்கும் எதிர் விளைவு உண்டு.  பாவக்காயை பயிரிட்டு விட்டு இளநீரை பெற்று விட முடியாது.


  என் தாகத்திற்கு நான் தான் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது போல் தண்டனையை நான் தான் அனுபவிக்க வேண்டும் அதை யாரும் தடுத்தி நிறுத்தி விட முடியாது.

 கடவுள் கூட பாவத்திற்கு தருவது தண்டனை அல்ல அதை திருத்தி கொள்ள ஒரு வாய்ப்பு.

 அழுக்கான குழந்தையை அழுதாலும் குளிப்பாட்டி சுத்தம் செய்பவள் தான் தாய்.

 புண்ணுக்கு புணுகு பூசுபவள் சரியான தாய் அல்ல.

  கடவுள் தாயினும் சாலப் பரிவுடையவன்.  தங்கத்தை நெருப்பில் புடம் போடுவது போல நம்மை சுத்த ஆத்மாவாக்க பல்வேறு வழிகளை தருகிறான்.

 வழி வலியை தருகிறது என்பதினால் பயணத்தை நிறுத்தி விட யாருக்கும் அதிகராம் இல்லை. 

 ஆனால் இந்த உண்மை கிறிஸ்துவ சமய பாதிரிமார்களுக்கு தெரிவது இல்லை.

 கிறிஸ்துவ சமயத்தாருக்கு மட்டும் உலகில் உள்ள பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை கடவுள் கொடுத்திருப்பது போல பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

  கிறிஸ்துவ சமயத்தை தழுவாதவர்கள் எவருக்கும் தண்டனையிலிருந்து விடுதலை இல்லை என்றும்  பேசி வருகிறார்கள். 

அவர்கள் சொல்வது சரியென்றால் ஏசுநாதர் கூட கிறிஸ்துவர் அல்ல.  அவர் காலத்திற்கு பல நூறு வருஷங்களுக்கு பின்பே கிறிஸ்துவ மதம் தோன்றியது. எனவே அவர் கிறிஸ்தவராக இருக்க வாய்ப்பு இல்லை

 எனவே பாதிரியார்களின் கூற்றுப்படி ஏசுநாதரின் பாவத்திற்கு கூட அவர் விடுதலை பெற முடியாது.

  இந்த கருத்தை அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்றால் தொடர்ந்து பாவ மன்னிப்பு சடங்கை நடத்தட்டும்.

 நமக்கு அதில் அக்கறையில்லை.

செல்வத்தை அள்ளித் தரும் மீன்கள்...!

நாய் பூனை போன்ற செல்ல பிராணிகளையும் மற்ற கால் நடைகளையும் வீட்டில் வளர்ப்பதற்கு கிராமபுரத்தில் அழகான காரணம் ஒன்று சொல்வார்கள்

குடும்பத்தில் உள்ள யாருக்காவது பெரிய அபாயங்கள் வந்தால் அதை வீட்டு பிராணிகள் வாங்கி கொண்டு தன்னை பலி கொடுத்துக் கொள்ளும் என்பார்கள்

பாசமாக வளர்ந்த பசு எதிர்பாரா விதமாக காலமானால் கூட எதோ பெரிய அபாயத்தை இழப்பை தடுப்பதற்க்காகவே இப்படி நிகழ்துள்ளது என்று இன்று வரை கூட கிராம மக்கள் நம்புகிறார்கள் 


சில நேரங்களில் இந்த நம்பிக்கை சரியாக இருப்பதை அனுபவத்தில் காண முடிகிறது இதே போன்றது தான் வீட்டில் மீன் வளர்க்கும் வழக்கமாகும்

மற்ற பிராணிகளுக்கு இல்லாத ஒரு தனி சக்தி மீன்களுக்கு உண்டு ஒரு மனிதனின் ஆழ்மனதின் எண்ண அதிர்வுகளை உடனுக்குடன் கிரகித்துக் கொள்ளும் ஆற்றல் அவைகளுக்கு உண்டு

மேலும் கண்ணுக்கு தெரிந்த தெரியாத நல்ல மற்றும் தீய சக்திகளின் தாக்கத்தையும் மீன்கள் தங்களுக்குள் ஈர்த்து கொள்ளும் 


இதனால் வீடுகளில் மீன்களை வளர்ப்பதனால் வீட்டுக் சொந்தக்காரன் பல வகையில் நன்மை அடைகிறான்

உடலாலும் மனதாலும் தெம்பையும் தெளிவையும் அனுபவிக்கும் போது செல்வம் என்பது தானாக வரக்கூடியது

மேலும் சீன வாஸ்து சாஸ்திரம் மீன்கள் செல்வத்தின் சின்னம் என்று சொல்கிறது

சீனாவின் வாஸ்து நமது நாட்டு சூழலுக்கும் ஏற்றது தான் எனவே தாராளமாக மீன்களை வீடுகளில் வளர்க்கலாம்

திருமணத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது ஏன்?

திருமணத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது ஏன்?



இந்திய தேசத் திருமணங்களில், அம்மி மிதித்து அருந்ததி காட்டும் வழக்கம் உண்டு. வசிஷ்டா என்ற பெயருக்கு உயிர்மூச்சுடன் உறுதியான மனம் கொண்டவன் என்ற பொருளும், அருந்ததி என்ற பெயருக்கு கணவனின் எண்ணம் அறிந்து கற்பு நெறியுடன் வாழ்பவள் என்ற பொருளும் புராணத்தில் கூறப்பட்டுள்ளது. வஸ்து என்றால் பஞ்சபூதங்கள் என்றும், வசிஷ்தா என்றால் பஞ்சபூதங்களில் ஐக்கியமானவன் என்றும் பொருள் உண்டு. திருமண பந்தத்தில் இணையும் நாள்வரை, மணப்பெண்ணானவள் தன்னையும் தன் உடலையும் காமக்கண்ணுடன் பிறர் பார்த்ததால், திருமண நாளில் தனது உடலை அக்னிக்குள் சமர்ப்பித்து தன்னைப் பரிசுத்தப்படுத்திக்கொள்வதுடன், தன்னைத் திருமணம் செய்துகொள்பவளின் பாவங்களையும் அதே அக்னியில் சாட்சியாக நீக்கி, பரிசுத்தப்படுத்தி, தன் ஆற்றல் எனும் ஆக்ஞை சக்கரத்தை கணவனுக்கு முழுமையாகக் கொடுத்து புருவ மத்தியில் திலகமாக ஏற்றுக்கொள்கிறாள்; கணவனிடம் சரணாகதி அடைகிறாள். பெண்ணின் கழுத்தில் மங்கல நாண் சூடிய கணவன் மணப்பெண்ணைப் பார்த்து, இனி நான் உனது உயிர்மூச்சாகவும் கல்லைப் போல மன உறுதியுடனும் இருந்து உன் வாழ்க்கைக்கு வழிகாட்டுவேன் என்பதை, வசிஷ்ட மகரிஷியின் சாட்சியாக உன் காலை அம்மிமீது வைத்து அதன் சாட்சியாக உன் காலில் மெட்டியைச் சூட்டுகின்றேன் என்று கூறுகின்றான். மணப்பெண்ணானவள், தன் கழுத்தில் மங்கல நாண் சூடிய கணவனுக்கு அருந்ததி நட்சத்திரத்தைக் காட்டி அருந்ததியைப் போல் ஏழு ஜன்மங்களிலும் உமக்கு மட்டும் மனைவியாக இருப்பேன் என்று சத்யப்பிரமாணம் செய்கின்றாள். அக்னியில் பிறந்த பெண், அக்னியாலேயே பரிசுத்தப்படுத்திக்கொண்டு ஆணையும் பரிசுத்தப்படுத்தி திருமணம் எனும் தெய்வீக பந்தத்துக்குள் இணைந்து அர்த்தநாரீஸ்வரியாகத் திகழ்கின்றாள்.

Monday, August 22, 2011

காலசர்ப தோஷம் தீராத துயரமா...?

   மூன்று மாதம் இருக்கும் என்று நினைக்கிறேன் முக வாட்டத்துடனும் உடல் சோர்வுடனும் ஒரு இளைஞன் என்னை காண வந்தான் அவனது தந்தையார் ஓரளவு வசதி பெற்றவர் சொந்தமாக குடியாத்தத்தில் ஜவுளிக் கடை வைத்திருக்கிறார் அவருக்கு இந்த இளைஞனும் மற்றொரு பெண்ணும் தான் குழந்தைகள் இவனும் நன்றாக படித்தவன் படித்து முடித்து விட்டு நல்ல வேலை கிடைத்து அமெரிக்கா சென்றான் அங்கே பொருளாதார வீழ்ச்சி நடந்த போது இவனது வேலையும் போய் தாய் நாடு திரும்பி விட்டான்

அதன் பிறகு பல இடங்களுக்கு சென்று வேலை தேடியிருக்கிறான் ஏராளமான நேர்முக தேர்வுகளை சந்தித்தும் இருக்கிறான் ஒன்றும் பயனில்லை கடிதம் எழுதுகிறோம் தொலைபேசியில் அழைக்கிறோம் மின்னஞ்சல் அனுப்புகிறோம் என்று சொன்னார்களே தவிர ஒரு நிறுவனத்தார் கூட அவனை வேலைக்கு அழைக்க வில்லை 
 
 
  ஆயிரம் தான் வீட்டில் வசதி இருந்தாலும் நல்ல வேலையில் இருந்தவனுக்கு தீடிர் என வேலை போய் நான்கு சுவற்றுக்குள் முடங்கி கிடந்தால் மனம் என்ன பாடு படும் தனது சோகத்தை வேதனையை பகிர்ந்து கொள்ளக் கூட ஆளில்லாமல் அவதிப் பட்டிருக்கிறான் தனக்கு தானே சமதானம் தேடி தோற்று போயிருக்கிறான்

அவனது தந்தையார் வேலை கிடைக்காவிட்டால் என்ன கடல் மாதிரி கடை இருக்கிறதே வந்து கல்லா பெட்டியில் உட்க்கார் நீ நாலு பேருக்கு சம்பளம் கொடு என்று ஆறுதலும் சொல்லி பார்த்திருக்கிறார் அவன் மனதில் அமெரிக்க வேலை அலுவலக சூழல் ஆழமாக பதிந்து விட்டதே தவிர வியாபாரம் செய்ய மனம் போக வில்லை

இந்த நிலையில் தனது ஜாதகத்தை எடுத்துக் கொண்டு ஒரு ஜோதிடரிடம் சென்றிருக்கிறான் அவரும் ஜாதகத்தை ஆழமாக பார்த்து விட்டு தம்பி உன் ஜாதகம் கால சர்ப தோஷம் கொண்டது எனவே உன் வாழ்க்கையில் எந்த கிரகமும் உனக்கு நன்மை செய்யாது வாழ்நாள் முழுவதும் கஷ்டத்தை அனுபவிப்பது தான் உன் தலை விதி உன் தகப்பனார் அழைக்கிறார் என்பதற்காக வியாபாரம் செய்ய நீ போனாலும் நஷ்டம் தான் ஏற்படும் அதனால் இருக்கும் சொத்தை வைத்து கொண்டு அமைதியாக வாழ முயற்சி செய் என்று சொல்லியிருக்கிறார் 
 

  கல்லை சுமந்தவன் தலையில் சம்மட்டியால் அடித்தது போல் ஆகி விட்டது தனது வாழ்க்கையே அவ்வளவு தான் இனி கதிமோட்சம் என்பது இல்லவே இல்லை என்ற முடிவிற்கு வந்து விட்டான் யாருக்கும் உபயோகம் இல்லாத வாழ்க்கையை வாழ்வதை விட வாழாமல இருப்பதே மேல் என்று நினைத்திருக்கிறான்

இந்த நிலையில் என்னை பற்றி யாரோ சொல்ல நேரடியாக வந்து விட்டான் அவன் ஜாதகத்தை அலசி ஆராய்ந்ததில் கால சர்ப தோஷம் இருப்பது தெளிவாக தெரிந்தது ஆனால் அதற்க்காக இவ்வளவு பயப்பட வேண்டிய அவசியம் இல்லை அந்த ஜோதிடரின் கூற்று படி இவனுக்கு எந்த கிரகமும் நன்மை செய்யாது என்றால் இவன் வசதியான குடும்பத்தில் பிறந்தது எப்படி? நல்ல கல்வியை கற்றது எப்படி? கற்றதோடு மட்டும் அல்ல சிறந்த வேலையில் அமர்ந்ததும் எப்படி? வேலை போனது கெட்ட நேரம் என்றால் வேலை வாங்கி கொடுத்தது நல்ல நேரம் தானே அப்படி இருக்க எந்த கிரகமும் இவனுக்கு ஒத்துழைக்காது என்பது எந்த வகையில் சரி என்று எனக்கு தோன்ற வில்லை

இந்த கால சர்ப தோஷத்தை பார்த்து நிறைய பேர் அஞ்சி நடுங்குகிறார்கள் செவ்வாய் தோஷத்தை காரணம் காட்டி எத்தனையோ திருமணங்கள் தடை படுவது போல இந்த தோஷத்தையும் காரணம் காட்டி பலரது வாழ்க்கை பந்தாடப் படுகிறது உண்மையில் கால சர்ப தோஷம் என்றால் என்ன? அதை கண்டு ஏன் இவ்வளவு நடுங்க வேண்டும்? அது கெடுதியை மட்டும் தான் செய்யுமா? என்று சிலர் யோசிக்க கூடும் 
 
 
வேறு சிலரோ கால சர்ப தோஷத்தில் சர்ப்ப என்ற வார்த்தை வருவதால் இது எதோ பாம்பு சம்பந்தப் பட்ட விஷயம் என்று நினைக்கிறார்கள் இந்த தோஷத்திற்கும் நம்மோடு வாழுகின்ற பாம்புகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை முதலில் தெளிவு படுத்த விரும்புகிறேன் ராகு கேது என்பது நிழல் கிரகங்கள் மட்டும் அல்ல இரண்டாக துண்டுப் பட்ட பாம்பின் வடிவத்தோடு இருப்பதாகவும் நமது முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள் அதனால் தான் ராகு கேது சம்பந்தப் பட்ட தோஷம் என்பதனால் கால சர்ப தோஷம் என்ற பெயர் இதற்கு வந்தது

பொதுவாக ஒரு ஜாதகத்தில் ஜனன லக்கினம் ஜனன ராசி உட்பட அனைத்து கிரகங்களும் ராகு கேதுகளுக்கு நடுவில் அகப்பட்டு கொண்டால் அந்த ஜாதகத்தை கால சர்ப தோஷ ஜாதகம் என்கிறார்கள் இந்த அமைப்பில் மற்ற கிரகங்கள் ஆட்சி உச்சம் பெற்றியிருந்தாலும் கூட அவைகள் நன்மையை தராது மேலும் அந்த கிரகங்களின் உடுமஹா தசை தசா புத்தி நடக்கும் காலம் கூட கேடுடையதாகவே அமையும் என்று பரவலாக நம்பப் படுகிறது

ஆனால் இந்த நம்பிக்கை ஜோதிட ஆய்வு படியும் அனுபவப் படியும் முழுமையான உண்மை இல்லை என்பதே எனது கருத்தாகும் சமத்கார சிந்தாமணி,தேவ கேரளம்,பிருகத் ஜாதகம்,சாராவளி கிரந்தம் ஜாதக அலங்காரம் ஆகிய பழமையான ஜோதிட நூல்கள் ஒருவனின் ஜாதகத்தில் கால சர்ப  தோஷம் அமைந்திருந்தால் அவன் முப்பத்திரண்டு வயது வரையில் பல சோதனைகளையும் தோல்விகளையும் மாறி மாறி சந்திப்பான் அதன் பிறகு அந்த தோஷம் தானாக நிவர்தியாகி நல்ல பலனை கொடுக்க ஆரம்பிக்கும் என்று சொல்கின்றன 
 
 
இந்த நூல்களில் சொல்லப்பட்டிருக்கிறது அதனால் இவைகள் தான் உண்மை மற்றவைகள் எதற்கும் உதவாதது என்று நான் சொல்ல வரவில்லை எந்த விசயமாக இருந்தாலும் அது புத்தகங்களில் எழுதப்பட்டு இருப்பதனால் மட்டும் உணமையாகி விடாது அந்த கருத்துக்கள் நமது வாழ்விலோ அல்லது நம்மை சார்ந்தவர்கள் வாழ்விலோ எந்த அளவு சரியாக நடந்துள்ளது என்பதை அனுபவத்தில் ஆராய வேண்டும்

கால சர்ப தோஷமுடைய நிறைய ஜாதகங்களை நான் ஆராய்ந்து இருக்கிறேன் அவர்கள் வாழ்க்கையையும் பல வருடமாக கவனித்தும் வருகிறேன் பழமையான நூல்கள் சொல்லுகிறப்படி சில காலங்கள் அவர்கள் கஷ்டத்தை அனுபவிப்பது என்னவோ உண்மை தான் ஆனால் மீதமுள்ள காலத்தில் பல வெற்றிகளையும் சந்தோசங்களையும் அவர்கள் தொடர்ந்து அனுபவித்து வருகிறார்கள்

கடவுளின் படைப்பில் துன்பம் மட்டுமே ஒருவனை தொடர்ச்சியாக தொடர்வது இல்லை பல நேரங்களில் வெற்றியும் இன்பமும் சந்திக்க வேண்டிய நிலையும் வருகிறது அதே போலவே இன்பம் மட்டுமே ஒருவனது முழு வாழ்வாக ஆகி விடாது

இங்கிலாந்து மகாராணி மனதிலும் சோகம் உண்டு தெருவோரத்தில் வாழ்பவனும் ஆனந்தம் அடைவதுண்டு எனவே தேவை இல்லாமல் கால சர்ப தோஷத்தை கண்டு அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை அதற்காக வாழ்வை இழக்க வேண்டிய தேவையும் இல்லை

ஏழரை சனிக்கு நீல மலர் பரிகாரம்

ஜோதிடம் ஜாதகம் இவைகளை எதிர்ப்பவர்கள் மூட நம்பிக்கை என சாடுபவர்கள் ஒரு குற்ற சாட்டை முன் வைக்கிறார்கள் பிரபஞ்சம் என்பது எல்லை இல்லாதது எங்கும் விரிந்தது கணக்கிட்டு சொல்ல முடியாத அளவிற்கு பிரம்மாண்டமானது அதில் நமது சூரிய குடும்பம் என்பது ஒரு சிறிய பகுதி அந்த சிறிய பகுதியில் பூமி என்பது ஒரு ஆரஞ்சி பழ அளவு தான் ஆரஞ்சி பழத்தின் மேல் சிற்றெறும்பு ஊர்வதை போல ஏன் அதை விட நூறு மடங்கு சிறிய பொருள் போல உள்ளவன் தான் மனிதன் அவனை எங்கோ ஒரு மூலையில் பிரம்மாண்டமாக இயங்கி கொண்டிருக்கும் கிரகங்கள் தேடி வந்து நல்லது கெட்டதை கொடுக்குமா? அப்படி கொடுக்க வேண்டிய அவசியம் தான் அவைகளுக்கு என்ன? அதனால் அவைகள் அடையும் நன்மை அல்லது தீமை தான் என்ன என்று கேட்கிறார்கள்

எந்த விளக்கத்தை சொன்னாலும் ஏற்று கொள்ள மறுக்கும் நாத்திகவாதிகள் மட்டும் இந்த கேள்வியை கேட்ப்பார்கள் என்றால் அதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை காரணம் சுவற்றை நோக்கி பேசப்படும் வார்த்தைகளுக்கு பெருமை இல்லை ஆனால் நம்மை போன்ற ஆத்திகர்களும் இந்த கேள்வியை கேட்கிறார்கள் அல்லது கேட்க்க விரும்புகிறார்கள் அதனால் விளக்கம் சொல்ல வேண்டிய தார்மிக கடமை நமக்குண்டு


 சூரிய சக்தியால் தான் பூமியில் உயிர் சலனம் இது வரை தொடர்ந்து வருகிறது என்பது நாம் அறியாதது அல்ல மரம் செடி கொடி மலர் துவங்கி மனிதன் வரையிலும் சூரிய சக்தியை பெறா விட்டால் மரணம் நிச்சயமாகி விடுகிறது ஒரு சிறிய புல் பூண்டுக்கு கூட ஆயிரம் லட்சம் காததூரம் இருக்கின்ற சூரியனின் சக்தியை கிரகித்து கொள்ளும் ஆற்றல இருக்கும் போது மனித உடம்பிற்கு அந்த ஆற்றல் இருக்காதா இருக்க கூடாத என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும் வேண்டுமானால் இப்படி சொல்லலாம் சூரிய வெப்பம் பூமியை நோக்கி வருகிறது அது ஊயிர்களின் மேல் விழுகிறது அது தான் சூரிய சக்தியை உயிர்கள் பயன்படுத்திக் கொள்ள காரணமாக இருக்கிறதே தவிர ஜீவ சரிரங்கள் சூரிய வெம்மையை ஈர்க்க வில்லை என்று வாதிடலாம்

வெப்பத்தை ஈர்க்கும் சக்தி சரிரங்களுக்கு இல்லை என்றால் சூடானது மேலுடம்போடு நின்ருவிடுமே தவிர உள்ளுக்குள் சென்று உள்ளுறுப்புகளை தாக்கவே தாக்காது ஆனால் நமது உயிர் வாழ்க்கை அனுபவத்தில் சூடும் குளிர்ச்சியும் நம்மை உள்ளும் புறமும் தாக்குவதை நன்றாகவே அறிவோம் சூரிய சக்தியானது எப்படி தங்கு தடை இல்லாமல் பூமியால் ஈர்க்கப் படுகிறதோ அதே போலவே தான் மாற்ற கிரகங்களின் தாக்கங்களும் பூமியின் மீது ஆட்சி செலுத்துகின்றன 


மனித உடம்பில் காலை நேரத்தில் சீதளமும் மதிய நேரத்தில் பித்தமும் மாலை நேரத்தில் வாதமும் மேலோங்கி நிற்பதாக இந்திய வைத்திய சாஸ்திரம் சொல்கிறது அதே போலவே ஒவ்வொரு வினாடியும் கூட நமது உடம்பிற்குள் பல ரசாயன மாற்றங்கள் நடந்து வருகிறது இந்த ரசாயன மாற்றங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான கிரக ஆற்றல்களை உள்ளிழுக்க வல்லது உதாரணமாக கம்பீரமான ஆண் மகனை பார்த்து ஒரு பெண் மையல் கொள்ளும்போது அவளுடைய உடம்பு சுக்கிரனின் ஆற்றலை அதிகப்படியாக ஈர்க்கிறது இப்படி தான் எங்கோ இருக்கும் கிரகம் மனிதனை ஆட்டுவிப்பதாக இந்திய ஞானிகள் கருதுகிறார்கள்

பொதுவாக பூமிக்கு வருகின்ற கிரகங்களின் அதிர்வாற்றல் மனிதனின் மூளையை நேரடியாக தாக்குகிறது மூளையிலிருந்து படிப்படியாக உடம்பிற்குள் பரவி நாடி நரம்பெங்கும் நிறைந்து மனிதனின் சிந்தனையை செயலை கட்டுப்படுத்துகிறது

உதாரணமாக ஒருவனுக்கு ஏழரை சனி அல்லது அஷ்டமத்து சனி நடப்பதாக வைத்து கொள்வோம் சனிக்கிரகத்தின் ஆற்றல் அவனது தலையில் துவங்கி பாதம் வரையில் மிக மெதுவாக பரவுகிறது இப்படி பரவுகின்ற நேரம் அந்த மனிதனின் எண்ணத்திலும் செயலிலும் இயல்பான நிலை குறைந்து மாறான நிலை அதிகப்படியாக செயல் படுகிறது அதாவது அவனுடைய உடல் சனிக்கிரகத்தின் தாக்குதலை தாங்க கூடியதாக இருந்தால் பாதிப்புகளிலிருந்து தப்பித்துக் கொள்கிறான் சக்தி குறைவாக இருந்தால் மாட்டிக் கொள்கிறான் 


 இப்படி மாட்டும் போது தான் பதற்றப்பட்டோ ஆசை வயப்பட்டோ கோபப்பட்டோ மனிதன் சில காரியங்களை செய்து துக்கத்திலும் சோகத்திலும் அகப்பட்டு கொள்கிறான் கிரகங்களின் ஈர்ப்பு என்பது ஒவ்வொரு வினாடியும் நடந்து கொண்டே இருக்கும் சங்கதி அதிலிருந்து தப்பித்துக் கொள்ள எந்த மனிதனாலும் ஆகாது நல்லதோ கெட்டதோ கிரகங்கள் தருகின்ற பரிசை மனிதன் பெற்று தான் ஆக வேண்டும்

இது தான் உண்மை நிலை எனும் போது கிரகங்களின் கொடிய பலனை பரிகாரங்கள் மூலம் நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்று சொல்வது எந்த வகையில் சரியாகும் பரிகாரங்கள் என்பதே மனிதனையும் மனித மனதையும் ஏமாற்றுகின்ற வேலைதானே என்று சிலர் நினைப்பது தெரிகிறது

எனது அனுபவத்தை பொருத்தவரை பரிகாரங்கள் என்பது பயனுடையதாக இருக்கிறதே தவிர பயனற்று இல்லை அதாவது சரியான முறையில் இந்திய ஞானிகள் அல்லது சித்தர்கள் வகுத்து தந்தப் படி பரிகாரங்களை செய்தால் எப்பொழுதும் வெற்றியை தவிர தோல்வியே இல்லை நமது சித்த புருஷர்கள் ஒரு கிரக தோஷம் என்றால் உடனே பூஜை போடு படையல் செய் என்று சொன்னதில்லை அந்த தோஷங்களுக்கு பண்டைய விஞ்ஞானப் படி வழி காட்டினார்கள் 


உதாரணமாக ஏழரை சனி நடக்கின்ற போது திருநள்ளாறு போ காகத்திற்கு எள்ளுஞ்சாதமும் வை என்று மட்டும் சொல்ல வில்லை தலை முதல் கால் வரை சனி ஓரையில் சனிக்கிழமையில் உடம்பு முழுவதும் நல்லெண்ணை பூசி பத்து நிமிடமாவது வெளிக்காற்றில் நின்று குளி என்றும் சொல்கிறார்கள்

இதற்கு காரணம் என்ன? நல்லெண்ணெய் எள்ளிலிருந்து தயாரிக்கப்படுவது தானியங்களில் எள்ளால் மட்டும் தான் சனிகிரகத்தின் ஆற்றலை உள்ளே இழுக்காமல் வெளியில் தள்ள இயலும் அதனால் அந்த எண்ணையை சனிக்கிழமை உடல் முழுவதும் பூசிக் கொண்டு வெட்ட வெளியில் நிற்கும் போது சனிக்கிரகத்தின் ஆற்றலை உள்ளுக்குள் ஈர்க்காத தன்மை வந்தமைகிறது

இது பழங்கால ரசாயன முறை அதே நேரம் நீல நிற மலர்களை உடம்பில் படும்படியாக அணிந்து கொள்ளுமாறும் சொல்லப்படுகிறது இதுவும் சனியின் ஆற்றலை நமது உடம்பு ஈர்க்காமல் தடுக்கிறது அப்படி தடுக்கப் படும்போது ஏழரை சனியின் அல்லது அஷ்டமத்து சனியின் கொடுமை குறைகிறது அதாவது சனியால் நமது புத்தி தடுமாறாமல் தடுக்கப் படுகிறது அதன் பிறகு ஏழரை சனியின் கொடுமை பெரியதாக இருக்காதல்லவா 


 இப்படி பட்ட விஞ்ஞான பூர்வமான பரிகாரங்கள் நமது முன்னோர்களால் நிறைய சொல்லப் பட்டுருக்கிறது சந்திரனின் ஆதிக்கம் அதிகமாக இருப்பவர்கள் பயந்தவர்களாகவும் குழப்ப வாதிகளாகவும் இருப்பதாக ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது இந்த சந்திரனின் கதிர் வீச்சு கட்டுப் படுத்தப் பட்டு ஒரு மனிதனுக்கு கிடைக்குமானால் அவன் ஆற்றல் மிக்கவனாக மாறி விடுவான் அதற்கு நமது முன்னோர்கள் சொல்லுகின்ற பரிகாரம் என்ன தெரியுமா மிகவும் சுலபமானது சட்டன்று கேட்டால் சிரிக்கவும் கூறியது சுண்டைக்காய் இருக்கிறதே சுண்டைக்காய் அதன் பூவை தினசரி பறித்து சட்டை பையிலோ அல்லது உடம்பில் எந்த பகுதிலோ நெருக்கமாக வைத்துக் கொண்டால் சந்திரகிரகத்தின் வீச்சு தன்மையை அது கட்டுப்படுத்தி விடுமாம்

இது சிரிக்க கூடிய விஷயம் அல்ல சிந்திக்க கூடிய விஷயமும் ஆகும் தற்கொலை செய்து கொள்ளும் மனோபாவத்தில் என்னிடத்தில் வருகின்ற நிறைய பேருக்கு சுண்டைக்காய் பூவை இன்னதென்று சொல்லாமல் தாயத்தில் போட்டு கொடுத்திருக்கிறேன் அவர்களும் அதை பெற்ற இரண்டு மூன்று நாட்களில் புதிய தெளிவை அடைந்திருகிறார்கள் அதானால் நமது முன்னோர்கள் கண்டுபிடித்த ஜோதிடமும் பரிகாரமும் ஒருவித விஞ்ஞானமே தவிர ஏமாற்று வேலை அல்ல

இப்படி எளிய சுலபமாக கிடைக்க கூடிய சில அறிய வகை தாவரங்களை முறைப்படி பயன் படுத்தி ஏராளமான நன்மைகளை மனிதன் பெறலாம் ஆனால் மனித திருவிளையாடலால் இன்று பல வகை தாவர இனங்கள் அரிதாக போய்விட்டது அவைகளை கண்டு பிடித்து பயன் பாட்டிற்கு கொண்டுவருவதற்குள் அதிகப்படியான செலவு என்பது தவிர்க்க முடியாததாக இருக்கிறது