Monday, January 20, 2014

கார்ய சித்தியாக்கும் ஆஞ்சநேய ஸ்லோகங்கள்

ஸ்ரீ ஆஞ்சநேயர் துதி மற்றும் ஸ்தோத்திரங்களைக் பாராயணம் செய்து பலன் பெறவும்.


1) ஸர்வ கல்யாண தாதாரம் ஸர்வாபத் கன மாருதம்
அபார கருணாமூர்த்திம் ஆஞ்ஜநேயம் நமாம்யஹம்

2) அஞ்ஜநா நந்தனம் வீரம் ஜானகீ சோ’கநாசனம்
கபீச’மக்ஷ ஹந்தாரம் வந்தே லங்கா பயங்கரம்

3) ஆஞ்சநேயமதி பாடலாநநம் காஞ்சநாத்ரி கமநீய விக்ரஹம்
பாரிஜாத தருமூலவாஸிநம் பாவயாமி பவமான நந்தனம்

4) யத்ர யத்ர ரகு நாத கீர்த்தனம்
தத்ர தத்ர க்ருதமஸ்தகாஞ்ஜலிம்
பாஷ்பவாரி பரிபூர்ணலோசனம்
மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம்

5) மனோஜவம் மாருத துல்ய வேகம்
ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம்
வாதாத்மஜம் வானரயூத முக்யம்
ஸ்ரீ ராமதூதம் சி’ரஸா நமாமி

ப்ரார்த்தனா மந்த்ரம்
புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்ப்பயத்வம் அரோகதா
அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனுமத் ஸ்மரணாத் பவேத்

கார்ய சித்தி மந்த்ரம்
அஸாத்ய ஸாதக ஸ்வாமின் அஸாத்யம் தவ கிம்வத
ராம தூத க்ருபாஸிந்தோ மத் கார்யம் ஸாதயப்ரபோ

நமஸ்கார மந்த்ரம்
ராமதூத மஹாதீர ருத்ரவீர்ய ஸமுத்பவ
அஞ்ஜநாகர்ப்ப ஸம்பூத வாயுபுத்ர நமோஸ்து தே

ஸ்ரீ ஆஞ்சநேய மூல மந்த்ரம்
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஹனுமதே ராம தூதாய
லங்கா வித்வம்ஸனாய
அஞ்சனா கர்ப்ப ஸம்பூதாய
சாஹினி டாஹினி வித்வம்ஸனாய
கில கில பூ காரினே விபீஷணாய
ஹனுமத் தேவாய
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம்
ஹ்ராம் ஹ்ரீம் ஹூம் பட் ஸ்வாஹா!!

ஆஞ்சநேய பல ச்ருதி மந்த்ரம்
ஓம் நமோ பகவதே ஆஞ்சனேயாய மஹா பலாய ஸ்ரீ ஹனுமதே ஸ்வாஹா

ஆஞ்சநேயர் காயத்ரி
ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
வாயு புத்ராய தீமஹி
தந்நோ : ஹநுமத் ப்ரசோதயாத்!!
ஓம் தத் புருஷாய வித்மஹே
வாயு புத்ராய தீமஹி
தந்நோ மாருதி ப்ரசோதயாத்

ஸ்ரீ ஆஞ்சநேயர் துதி
அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்றாறாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான்.

ஸ்ரீ ஹனுமத் கவசம்
அஸ்ய ஸ்ரீ ஹனுமத்கவச ஸ்தோத்ர மஹா மந்த்ரஸ்ய

ஸ்ரீராமசந்த்ரருஷி:
காயத்ரீச்சந்த:
ஸ்ரீ ஹனுமான் பரமாத்மா தேவதா
மாருதாத்மஜ இதி பீஜம்
அஞ்ஜனாஸூனுரிதி ச’க்தி:
ஸ்ரீராமதூத இதி கீலகம்
மம மானஸாபீஷ்ட ஸித்யர்த்தே ஜபே வினியோக:

ஸ்ரீ ராமசந்த்ர உவாச :-
ஹனுமான் பூர்வத: பாது தக்ஷிணே பவனாத்மஜ:
ப்ரதீச்யாம் பாது ரக்ஷோக்ன: ஸௌம்யாம் ஸாகரதாரண:
ஊர்த்வம் மே கேஸரீ பாது விஷ்ணு பக்தஸ்துமேஹ்யத:
லங்காவிதாஹக: பாது ஸர்வாபத்ப்யோ நிரந்தரம்
ஸுக்ரீவ ஸ சிவ: பாது மஸ்தகே வாயுநந்தன:
பாலம் பாது மஹாவீர: ப்ருவோர்மத்யே நிரந்தரம்
நேத்ரே சாயாபஹாரீ ச பாது மாம் ப்லவகேச்’வர:
கபோலௌ கர்ணமூலே து பாது மே ராமகிங்கர:
நாஸாயாமஞ்ஜனாஸூனு: பாது வக்த்ரம் ஹரீச்’வர:
பாது கண்டம் ச தைத்யாரி: ஸ்கந்தௌ பாது ஸுரார்சித:
புஜௌ பாது மஹா தேஜா: கரௌ து சரணாயுத:
நகான் நகாயுத: பாது குக்ஷௌ பாது கபீச்’வர:
வக்ஷௌ முத்ராபஹாரீச பாது பார்ச்’வே மஹாபுஜ:
ஸீதா சோ’கப்ரஹர்தாச ஸ்தனௌ பாது நிரந்தரம்
லங்காபயங்கர: பாது ப்ருஷ்டதேசே’ நிரந்தரம்
நாபிம் ஸ்ரீராமசந்தரோ மே கடிம் பாது ஸமீரஜ:
குஹ்யம் பாது மஹாப்ராக்ஞ: ஸக்தினீ ச சி’வப்ரிய:
ஊரூ ச ஜானுனீ பாது லங்கா ப்ராஸாத பஞ்சன:
ஜங்கே பாது கபிச்’ரேஷ்ட: குல்பம் பாது மஹாபல:
அசலோத்தாரக: பாது பாதௌ பாஸ்கர ஸன்னிப:
அங்கான்யமிதஸத்வாட்ய: பாது பாதாங்குளீஸ்ஸதா
ஸர்வாங்காநி மஹா சூ’ர: பாது ரோமாணி சாத்மவான்
ஹனுமத் கவசம் யஸ்து படேத் வித்வான் விசக்ஷண:
ஸ ஏவ புருஷச்’ரேஷ்ட: புக்திம் முக்திஞ்ச விந்ததி
த்ரிகாலம் ஏககாலம் வா படேன் மாஸத்ரயம் நர:
ஸர்வான் ரிபூன் க்ஷணாஜ்ஜித்வா ஸ புமான் ச்’ரியம் ஆப்னுயாத்
அர்தராத்ரௌ ஜலேஸ்தித்வா ஸப்த வாரம் படேத்யதி
க்ஷயாபஸ்மார குஷ்டாதி தாபத்ரய நிவாரணம்
அச்’வத்தமூலே அர்கவாரே ஸ்தித்வா படதி ய:புமான்
அசலாம் ச்’ரியமாப்னோதி ஸங்க்ராமே விஜயீபவேத்
ஸர்வரோகா: க்ஷயம் யாந்தி ஸர்வஸித்திப்ரதாயகம்
ய: கரே தாரயேந்நித்யம் ராமரக்ஷா ஸமன்விதம்
ராமரக்ஷம் படேத்யஸ்து ஹனூமத் கவசம் வினா
அரண்யே ருதிதம் தேன ஸ்தோத்ரபாடஞ்ச நிஷ்பலம்
ஸர்வ து:க பயம் நாஸ்தி ஸர்வத்ர விஜயீ பவேத்
அஹோராத்ரம் படேத்யஸ்து சு’சி: ப்ரயதமானஸ:
முச்யதே நாத்ரஸந்தேஹ: காராக்ருஹகதோ நர:
பாபோபபாதகான் மர்த்ய: முச்யதே நாத்ரஸம்ச’ய:
அக்ஷக்னோ ஜிதராக்ஷஸேச்’வர மஹாதர்பாபஹாரீரணே
ஸோயம் வானரபுங்கவோ அவது ஸதா த்வஸ்மான் ஸமீராத்மஜ:
ஸ்ரீ ராம விரசித ஸ்ரீ ஆஞ்சநேய கவசம் ஸம்பூர்ணம்.
வைதேஹீ கன சோ’க தாபஹரணோ வைகுண்டபக்திப்ரிய:
அக்ஷக்னோ ஜிதராக்ஷஸேச்’வர மஹாதர்பாபஹாரீரணே
ஸோயம் வானரபுங்கவோ அவது ஸதா த்வஸ்மான் ஸமீராத்மஜ:
ஸ்ரீ ராம விரசித ஸ்ரீ ஆஞ்சநேய கவசம் ஸம்பூர்ணம்.

விளக்கேற்றும் முன் சொல்ல வேண்டியவை….

ஸுபம் கரோதி கல்யாணம் ஆரோக்யம் தநஸம்பத:


ஸத்ருபுத்திவிநாஸாய தீபஜ்யோதிர் நமோஸ்துதே

விளக்கொளி நற்பேற்றினையும் நன்மையையும் நோயற்ற நிலையையும் நிறைந்ந செல்வத்தையும் அளிக்கிறது. அறிவின் பகையை (அறியாமையை) அழிக்கும் உனக்கு எனது நமஸ்காரம்.

தீபமூலே ஸ்திதோ ப்ரஹ்மா தீபமத்யே ஜநார்தந:

தீபாக்ரே ஸங்கரே: ப்ரோக்த: ஸந்த்யாதீப நமோஸ்துதே

தீபத்தின் அடிப்பகுதியில் பிரம்மாவும், தீபத்தின் நடுப்பகுதியில் விஷ்ணுவும்ம, தீபத்தின் மேல் பகுதியில் சிவனும் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட ஸந்த்யா தீபமே உனக்கு நமஸ்காரம்.

செல்வ வளம் கொழிக்கும் லட்சுமி தேவி ஸ்லோகம்



நம் இல்லத்தில் லட்சுமி தேவியின் அனுக்கிரகம் பரிபூரணமாக கிடைத்தால்………செல்வநிலைக்கு பஞ்சம் ஏற்படாது. எனவே தினமும் லட்சுமி தேவியின் ஸ்லோகத்தை பாராயணம் செய்து வரலாம்

பொன்னரசி, நாரணனார் தேவி, புகழரசி

மின்னுநவ ரத்தினம்போல் மேனியழகுடையாள்

அன்னையவள் வையமெல்லாம் ஆதரிப்பாள் ஸ்ரீதேவி

தன்னிருபொற் றாளே சரண்புகுந்து வாழ்வோமே.

நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே

சங்கசக்ரகதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

எல்லா சக்திகளையும் உடையவளே! செல்வங்களின் இருப்பிடமே! தேவர்களால் வழிபடப்படுவளே! உனக்கு நமஸ்காரம். சங்கையும், சக்கரத்தையும், கதையையும் கையில் கொண்டவளே! மஹாலக்ஷ்மியே! உனக்கு நமஸ்காரம்.

வீட்டின் பூஜை அறை எப்படி இருக்க வேண்டும்?


மனதிற்கு நிம்மதியை தருவது ஆண்டவன் சந்நிதி. அது போலவே ஒரு வீட்டில் உள்ள பூஜை அறையும். அது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சில முக்கிய குறிப்புகள்…

ஒரு வீட்டில் பூஜை அறை வட கிழக்கில் அல்லது வடக்கில் அல்லது கிழக்கில் அமைக்கப்பட வேண்டும். பெரிய வீடாக இருந்தால் வீட்டின் மையப் பகுதியில் பூஜை அறை அமைக்கலாம்.

ஒரு பெரிய வீட்டில் இரண்டு தளங்கள் இருந்து எல்லோரும் அந்த வீட்டில் ஒரு குடும்பமாக வசித்தால் அவற்றில் தரை தளத்தில் பூஜை அறை இருக்க வேண்டும்.

பூஜை அறையில் கடவுளின் படம் அல்லது உருவம் கிழக்கு திசை பார்த்து இருக்க வேண்டும். அதாவது நாம் வணக்கும் போது கடவுளின் படங்கள் கிழக்கு பார்த்து இருக்க வேண்டும். மேற்கு நோக்கியும் இருக்கலாம். பூஜை அறையின் வழிபடும் பகுதியில் வட கிழக்கு மூலையில் ஒரு பித்தளை செம்பில் அல்லது டம்ப்ளரில் நீர் பிடித்து வைக்க வேண்டும். இந்த நீரை தினமும் மாற்ற வேண்டும்.

தென்-கிழக்கு மூலையில் குத்து விளக்கை வைத்து விளக்கேற்ற வேண்டும். முக்கியமாக கவனிக்க வேண்டியது, பூஜை அறையில் நம் முன்னோர்களின் புகைப்படங்களை வைக்கக் கூடாது.

பூஜை அறையை குப்பைகள் இன்றி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பூஜை அறை சுவர்களின் வண்ணம் வெள்ளை அல்லது இளமஞ்சள் அல்லது நீல நிறத்தில் இருக்க வேண்டும். பூஜை அறையை வழிபடுவதற்கு, தியானம் செய்வதற்கு மட்டும் பயன் படுத்த வேண்டும்.

சில வீடுகளில் இடப்பற்றாக்குறை காரணமாக படுக்கை அறை அல்லது சமையல் அறை சுவர்களில் உள்ள அலமாரிகளை பூஜை அறையாக பயன்படுத்துவதுண்டு. அப்படி இருந்தால் வழிபடும் நேரம் தவிர அந்த அலமாரியை மூடி வைக்க வேண்டும். அதாவது கதவு இருந்தால் அதை அடைத்து வைக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் துணித்திரை கொண்டு மூடி வைக்க வேண்டும். சில சமயங்களில் கதவு உள்ள மரப்பெட்டிகளில் கடவுள் படங்களை வைத்து வழிபடுவதும் உண்டு. இதை சமையல் அறையின் வட கிழக்கு மூலையில் வைக்கலாம்.

பூஜை அறைக்கு இரண்டு கதவுகள் இருக்க வேண்டும். அவை வெளிப்புறமாக திறக்கும்படி இருக்க வேண்டும். பூஜை அறையில் மந்திர உச்சாடனங்களை தினமும் ஒன்றிரண்டு தடவை ஒலிபரப்பாகும்படி செய்ய வேண்டும் அல்லது நாமும் வாய் விட்டு சொல்லலாம். இது வீட்டில் நேர்மறை எண்ணங்களை கொண்டு வரும்.

அனைத்தையும் விட பூஜை அறையில் மனதை ஒருமுகப்படுத்தி, தீர்க்கமாக நமது பிரார்த்தனையை கடவுளிடம் முன் வைக்க வேண்டும். அது ஒரு நிமிடம் நீடித்தாலும் கூட போதுமானது. சிலர் கடமைக்காக அவசர அவசரமாக விளக்கை ஏற்றி, கையை எடுத்து கூம்பிட்டு சென்று விடுவர். இறைவனை பிரார்த்திக்கும் போது நேரம் ஒதுக்கி வழிபடுவது நல்லது.

மரணப்படுக்கையில் தண்ணீர் கொடுப்பது ஏன்?


குருசேத்திரப் போர் நடந்து கொண்டிருந்த போது, பிஷ்மரின் தந்தை சந்தனு மகனுக்கு ஒரு வரமளித்தார். ‘எப்பொழுது பீஷ்மர் மரணமடைய விரும்புகிறாரோ அப்போது மரணமடைவார்’ என்பதே அது. பத்தாம் நாள் போர் அனறு, பீஷ்மர் பாண்டவர் படைக்குப் பலத்த சேதத்தை ஏற்படுத்தினார். அப்போது அவருக்குத் தான் செய்யும் செயலில் சலிப்பு ஏற்பட்டது. உடன் தான் இறக்க நினைத்தார்.

அவரின் நிலையை அறிந்த அர்ச்சுணன் தேரின் முன்னால் சிகண்டியை நிறுத்தி விட்டு பீஷ்மர் மேல் அம்பெய்தினான். சிகண்டி முன் போர் புரிய விரும்பாத பீஷ்மர் அமைதியாயிருந்தார். அர்ச்சுனனின் அம்புகள் அவரது உடலைத் துளைத்தன. உத்திராயண காலத்தில் இறக்க விரும்பிய பீஷ்மர் அம்புப் படுக்கையில் இருந்தார்.

அவரைத் தரிசிக்கவும் ஆசி பெறவும் பல அரசர்களும் வீரர்களும் வந்தனர். உடலில் காயங்களுடன் படுத்த படுக்கையாக இருந்த பீஷ்மர் இதனால் மிகவும் களைப்படைந்தார். தாகம் ஏற்படவே அருந்தத் தண்ணீர் கேட்டார். துரியோதனனும் கர்ணனும் நறுமணம் மிக்க இனிய பானங்களைக் கொண்டு வந்தும் அதை அருந்தவில்லை.

அர்ச்சுணனை நோக்கி, ‘சாத்திரங்கள் கூறும் வழியில் எனக்கு தண்ணீர் தருவாயாக’ என்றார். அர்ச்சுணன் தன் காண்டீபத்தை நாணேற்றி பீஷ்மரின் தலைக்கருகே ஏவினான். உடனே பூமி பிளந்து பீஷ்மரின் தாயான கங்கை நீர் ஊற்றாகப் புறப்பட்டு நேராக பீஷ்மரின் வாயின் அருகில் பாய்ந்தது. பீஷ்மரும் அதைப் பருகித் தாகம் தணிந்தார்.

மங்காத புகழ் பெற்ற பீஷ்மருக்கு மரணப் படுக்கையில் ஏற்பட்ட தாகம், கங்கையான அவளது தாயால் தணிந்தது. இதனால்தான் இன்றும் மரணப்படுக்கையில் இருப்பவருக்குக் கங்கை எனும் நீர் கொடுக்கும் பழக்கம் இருக்கிறது.