Monday, October 3, 2011

குழந்தைக்கு முதல் முறையாக முடியிறக்குவதன் அர்த்தம்

குழந்தைக்கு முதல் முறையாக முடியிறக்குவதை சூடாகர்ம சமஷ்காரம் என்று நமது இந்து மத சாஸ்திரங்கள் சொல்கின்றன இந்த சமஷ்காரத்தை குழந்தை பிறந்து ஒருவருடம் பூர்த்தியான பிறகு செய்ய வேண்டும் இரட்டைபடை வயதில் குழந்தைக்கு சடங்கு செய்யக்கூடாது என்று பெரியவர்கள் சொல்வதால் மூன்று வயதிலோ ஐந்து வயதிலோ செய்ய வேண்டும் சிலர் முடியிறக்குவது என்றவுடன் தலைமுடியில் சிறுபகுதியை மட்டும் கோவிலில் வெட்டிவிட்டால் போதும் என நினைத்து செய்கிறார்கள் இது தவறு குழந்தையின் தலையை முழுமையாக மளித்து மொட்டை போட்டு விடவேண்டும்

  மொட்டை போட்டவுடன் தலையில் வெண்ணை அல்லது தயிர் ஆடையை தேய்த்த பிறகே சந்தனம் பூசவேண்டும் இப்படி சந்தனம் பூசுவது குழந்தையின் தகப்பனார்தான் செய்யவேண்டும் என சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன இதன் தத்துவம் இறைவனின் சித்தமும் தன் சித்தமும் குழந்தையை வழி நடத்தட்டும் என்பதாகும் அதாவது இந்த குழந்தைக்காக இதன் வளர்ச்சிக்காக இதன் பாதுகாப்பிற்காக நான் பாடுபடுவேன் என தகப்பனார் சத்திய பிரமாணம் எடுத்து கொள்வதே உள்ளர்த்தம். 


No comments:

Post a Comment