Tuesday, February 7, 2012

இருதார ஜாதகம் எப்படி இருக்கும் ?

அகத்தியர் மற்றும் புலிபாணி சித்தரின் ஜோதிட நெறிப்படி ஒன்றிற்கு மேற்பட்ட பெண் கிரகங்கள் குருவை பார்த்தால் இருதார அமைப்பு வரும் என்று சொல்லப்படுகிறது அதன் படி குரு இருக்கும் ராசிக்கு ஒன்று ஐந்து ஒன்பது மூன்று ஏழு பதினென்று இரண்டு பனிரெண்டு ஆகிய இடங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்கிரகங்கள் இருக்க வேண்டும் சந்திரன் சுக்கிரன் புதன் ஆகிய கிரகங்கள் பெண் கிரகங்கள் என்று அழைக்கப்படுகிறது இந்த மாதிரி இடங்களில்; சந்திரன் இருந்தால் இரண்டாவது மனைவி வயதில் மூத்தவலாகவும் சுக்கிரன் இருந்தால் சமவயது பெண்ணாகவும் புதன் இருந்தால் மிகவும் இளவயது பெண்ணாகவும் அமையுமென்று பராசர முனிவரின் ஜாதக சூத்தகம் சொல்கிறது

No comments:

Post a Comment