Thursday, August 25, 2011

செல்வத்தை அள்ளித் தரும் மீன்கள்...!

நாய் பூனை போன்ற செல்ல பிராணிகளையும் மற்ற கால் நடைகளையும் வீட்டில் வளர்ப்பதற்கு கிராமபுரத்தில் அழகான காரணம் ஒன்று சொல்வார்கள்

குடும்பத்தில் உள்ள யாருக்காவது பெரிய அபாயங்கள் வந்தால் அதை வீட்டு பிராணிகள் வாங்கி கொண்டு தன்னை பலி கொடுத்துக் கொள்ளும் என்பார்கள்

பாசமாக வளர்ந்த பசு எதிர்பாரா விதமாக காலமானால் கூட எதோ பெரிய அபாயத்தை இழப்பை தடுப்பதற்க்காகவே இப்படி நிகழ்துள்ளது என்று இன்று வரை கூட கிராம மக்கள் நம்புகிறார்கள் 


சில நேரங்களில் இந்த நம்பிக்கை சரியாக இருப்பதை அனுபவத்தில் காண முடிகிறது இதே போன்றது தான் வீட்டில் மீன் வளர்க்கும் வழக்கமாகும்

மற்ற பிராணிகளுக்கு இல்லாத ஒரு தனி சக்தி மீன்களுக்கு உண்டு ஒரு மனிதனின் ஆழ்மனதின் எண்ண அதிர்வுகளை உடனுக்குடன் கிரகித்துக் கொள்ளும் ஆற்றல் அவைகளுக்கு உண்டு

மேலும் கண்ணுக்கு தெரிந்த தெரியாத நல்ல மற்றும் தீய சக்திகளின் தாக்கத்தையும் மீன்கள் தங்களுக்குள் ஈர்த்து கொள்ளும் 


இதனால் வீடுகளில் மீன்களை வளர்ப்பதனால் வீட்டுக் சொந்தக்காரன் பல வகையில் நன்மை அடைகிறான்

உடலாலும் மனதாலும் தெம்பையும் தெளிவையும் அனுபவிக்கும் போது செல்வம் என்பது தானாக வரக்கூடியது

மேலும் சீன வாஸ்து சாஸ்திரம் மீன்கள் செல்வத்தின் சின்னம் என்று சொல்கிறது

சீனாவின் வாஸ்து நமது நாட்டு சூழலுக்கும் ஏற்றது தான் எனவே தாராளமாக மீன்களை வீடுகளில் வளர்க்கலாம்

No comments:

Post a Comment